செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Jan 2022 2:01 PM GMT (Updated: 14 Jan 2022 2:01 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது.

2,030 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,030 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,557 ஆக உயர்ந்துள்ளது. 11,701 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 502 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 75 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,275 பேர் உயிரிழந்துள்ளனர். 3,058 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story