தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி


தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 2:18 AM GMT (Updated: 24 May 2019 2:18 AM GMT)

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

தேனி,

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று ரவீந்திரநாத் குமார் வென்றார். 

தமிழகத்தில் இருந்து அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.  வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவீந்திரநாத் குமார், வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்தார். 


Next Story