பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 16 பேர் கைது


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 16 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.64¼ லட்சம் மதிப்பிலான நகைகள், செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

204 செல்போன்கள் பறிமுதல்

பெங்களூரு விஜயநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறித்து வந்த 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் 4 பேரும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.30.11 லட்சம் ஆகும்.

இதுபோல மாகடி ரோடு போலீசார் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18.75 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. கோவிந்தராஜ் நகர் போலீசார் வீடுகளின் கதவுகளை உடைத்து திருடியதாக 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11.75 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கூடுதல் கமிஷனர்

காமாட்சிபாளையா போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.3.60 லட்சம் ஆகும்.

ஒட்டுமொத்தமாக கைதான 16 பேரிடம் இருந்து ரூ.64.21 லட்சம் மதிப்பிலான 619 கிராம் தங்கநகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள், 210 செல்போன்கள், 9 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள், 2 கைக்கெடிகாரங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை மேற்கு மண்டல கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story