சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை


சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
x

கோப்புப்படம் 

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிக்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்மே கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.

சண்டை ஓய்ந்த பிறகு அங்கு கிடந்த 2 மாவோயிஸ்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story