காஷ்மீரில் துணை ராணுவப்படை வாகனம் மீது கையெறி குண்டுவீச்சு


காஷ்மீரில் துணை ராணுவப்படை வாகனம் மீது கையெறி குண்டுவீச்சு
x
தினத்தந்தி 7 Sep 2017 11:30 PM GMT (Updated: 7 Sep 2017 7:36 PM GMT)

துணை ராணுவப்படையினர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகர் ஸ்ரீநகர். அங்கு முதல்–மந்திரி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் அரசு தலைமைச் செயலகத்துக்கு ஜஹாங்கிர் சவுக் வழியே செல்வது வழக்கம். இந்த பகுதி எப்போதுமே மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், நேற்று அங்கு துணை ராணுவப்படையினர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி குடிமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.


Next Story