உத்தர பிரதேசத்தில் தணிக்கை துறை ஐ.டி. ஊழியர் ஆணவ கொலையில் 2 பேர் கைது


உத்தர பிரதேசத்தில் தணிக்கை துறை ஐ.டி. ஊழியர் ஆணவ கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2018 9:12 AM GMT (Updated: 23 Sep 2018 9:12 AM GMT)

உத்தர பிரதேசத்தில் தணிக்கை துறை ஐ.டி. ஊழியர் ஆணவ கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் வசித்து வந்தவர் மனோஜ் சர்மா (வயது 26).  இவரது மனைவி சோனியா.  வேறு வேறு சாதியை சேர்ந்த இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  மனோஜ் தணிக்கை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி உறவினரின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.  அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார்.  இதுபற்றி மனோஜின் மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  இதில் சோனியாவின் சகோதரர்கள் 2 பேர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முசாபர்நகரின் குத்பா கிராமத்தில் வன பகுதியில் இருந்து மனோஜின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஆதேஷ் மற்றும் விஷால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்கள் மனோஜின் மனைவியின் சகோதரர்கள் ஆவர்.  தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானாவில் சமீபத்தில் பிரனாய் என்பவர் வேறு சாதி பெண்ணான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் தந்தையால் கூலிப்படையை சேர்ந்த நபரை கொண்டு கொலை செய்யப்பட்டார்.

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் மற்றொரு சம்பவத்தில் சந்தீப் என்பவர் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் தந்தையால் அரிவாளால் வெட்டப்பட்டார்.


Next Story