ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 3 Dec 2018 4:35 AM GMT (Updated: 3 Dec 2018 4:35 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்திற்குட்பட்ட சர்கான் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த தகவலின் படி, துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சிக்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


Next Story