டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தினவிழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்

டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசாக அறிவிக்கப்பட்டது.
இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி 70-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டங்கள் அரங்கேறின. இந்த ஆண்டு தேசத்தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால், அவரது கொள்கைகள் மற்றும் வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் முதலாவதாக போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக டெல்லியில் அமைக்கப்பட்டு உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விழா நடைபெறும் ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார். அவர் ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்து விழாவில் பங்கேற்றார்.
பின்னர் குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார்.
இறுதியில் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ராம்நாத் கோவிந்த் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நசிர் அகமது வானிக்கு (வயது 38) இந்தியாவின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை (மரணத்துக்குப்பின்) ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். நசிர் அகமது வானி பயங்கரவாதியாக இருந்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை தொடர்ந்து நாட்டின் வலிமையை பறைசாற்றும் முப்படையினரின் அணிவகுப்பு தொடங்கியது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கி இருந்தன. குறிப்பாக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய, 90 வயதை கடந்த 4 வீரர்கள் முதல் முறையாக ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்றனர்.
விமானப்படையின் இலகு ரக தாக்குதல் விமானம், சுகோய்-30எம்.கே.ஐ. விமானம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஏவுகணைகளின் கம்பீர அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்தது.
இதைப்போல தரைப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு கூட்டத்தினரை வியக்க வைத்தது. அவர்களை தொடர்ந்து 144 போர் விமானிகள் உள்பட விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், லெப்டினன்ட் கமாண்டர் அம்பிகா சுதாகரன் தலைமையில் 144 இளம் மாலுமிகளின் அணிவகுப்பும் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்தது.
அத்துடன் கடற்படை, விமானப்படை சார்பில் அலங்கார ஊர்திகளும் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன. இடையில் முப்படையினரின் வீரசாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. அவற்றுக்கு பார்வையாளர்கள் பலத்த கரவொலியால் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் துணை ராணுவம், தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ். மாணவர்களும் சிறப்பான அணிவகுப்பை நடத்திச்சென்றனர். இடையில் வீரதீர செயல்களுக்காக ஜனாதிபதி விருது பெற்ற குழந்தைகள் திறந்த ஜீப்பில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
முப்படை அணிவகுப்பை தொடர்ந்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அவை அனைத்தும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கருப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
விழாவின் முத்தாய்ப்பாக, வானில் போர் விமானங்களின் சாகசங்கள் அரங்கேறின. இதில் ஹெர்குலிஸ், சுகோய்-30 எம்.கே.ஐ., குளோப்மாஸ்டர், ஜாகுவார், மிக்-29 போன்ற விமானங்கள் மற்றும் இலகு ரக ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன.
இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. அப்போது மூவர்ண பலூன் கள் பறக்கவிடப்பட்டன.
90 நிமிடம் நடந்த இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக் கான பொதுமக்களும் விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு முதல்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இதில் குறிப்பாக முழுவதும் பெண்களே இடம் பெற்ற அசாம் ரைபிள் படையினர் ராஜபாதையில் கம்பீரமாக அணிவகுத்து ஆண்களுக்கு சரிநிகர் சமம் என்பதை எடுத்துக்காட்டினர்.
இதைப்போல அணிவகுப்பில் கலந்து கொண்ட தரைப்படை, கடற்படையின் சில பிரிவுகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப பிரிவுக்கு பெண் அதிகாரிகளே தலைமை தாங்கி கவனம் ஈர்த்தனர். மேலும் கேப்டன் ஷிகா சுரபி தனது சக ஆண் அதிகாரிகளுடன் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டது பலத்த வரவேற்பை பெற்றது.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 4 வீரர்கள் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். 90 வயதை கடந்த அவர்கள் நேதாஜியின் உருவப்படத்துடன் திறந்த ஜீப்பில் வலம் வந்தபோது கூட்டத்தினரின் கரவொலி அடங்க நேரம் பிடித்தது.
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட இலகு ரக எம்.777 பீரங்கிகள், கே.9 வஜ்ரா மற்றும் தானியங்கி பீரங்கி போன்றவை முதல் முறையாக ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்றன. விமான சாகசத்தில் ஈடுபட்ட ஏ.என்.32 ரக போர் விமானம் ஒன்று முதல் முறையாக பாரம்பரிய எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளில் இயக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 6-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அந்த கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதனால் நேற்றைய விழாவில் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதில் அமர்ந்து விழா நிகழ்வுகளை கண்டுகளித்தார். இதைப்போல கடந்தமுறை ராகுல்காந்தியுடன் 6-வது வரிசையில் இருந்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத்துக்கு ராகுலுக்கு பிந்தைய வரிசையில் இடம் அளிக்கப்பட்டது. அதில் அமர்ந்து அவர் விழாவில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 22 அலங்கார ஊர்திகள் நேற்றைய அணிவகுப்பில் இடம்பெற்றன. மகாத்மாகாந்தியின் கொள்கைகள் மற்றும் போராட்டங்களை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரதங்கள், காந்தியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டின.
அந்தவகையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை சித்தரித்த மராட்டிய ஊர்தி, அந்தமான் சிறைக்கைதிகளுக்கு காந்தி வழங்கிய அறிவுரையை வெளிப்படுத்தும் அந்தமான் ஊர்தி, தண்டி யாத்திரையை நினைவுகூரும் குஜராத் ஊர்தி, பெலகாவி காங்கிரஸ் மாநாட்டை சித்தரிக்கும் கர்நாடக ஊர்தி, அனசக்தி ஆசிரமத்தை சித்தரிக்கும் உத்தரகாண்ட் ஊர்தி போன்றவை பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசாக அறிவிக்கப்பட்டது.
இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி 70-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டங்கள் அரங்கேறின. இந்த ஆண்டு தேசத்தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால், அவரது கொள்கைகள் மற்றும் வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் முதலாவதாக போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக டெல்லியில் அமைக்கப்பட்டு உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விழா நடைபெறும் ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார். அவர் ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்து விழாவில் பங்கேற்றார்.
பின்னர் குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜபாதைக்கு வந்து சேர்ந்தார்.
இறுதியில் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழா மேடைக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ராம்நாத் கோவிந்த் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நசிர் அகமது வானிக்கு (வயது 38) இந்தியாவின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை (மரணத்துக்குப்பின்) ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். நசிர் அகமது வானி பயங்கரவாதியாக இருந்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை தொடர்ந்து நாட்டின் வலிமையை பறைசாற்றும் முப்படையினரின் அணிவகுப்பு தொடங்கியது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கி இருந்தன. குறிப்பாக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய, 90 வயதை கடந்த 4 வீரர்கள் முதல் முறையாக ராஜபாதை அணிவகுப்பில் பங்கேற்றனர்.
விமானப்படையின் இலகு ரக தாக்குதல் விமானம், சுகோய்-30எம்.கே.ஐ. விமானம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஏவுகணைகளின் கம்பீர அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்தது.
இதைப்போல தரைப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு கூட்டத்தினரை வியக்க வைத்தது. அவர்களை தொடர்ந்து 144 போர் விமானிகள் உள்பட விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், லெப்டினன்ட் கமாண்டர் அம்பிகா சுதாகரன் தலைமையில் 144 இளம் மாலுமிகளின் அணிவகுப்பும் பார்வையாளரின் கவனத்தை ஈர்த்தது.
அத்துடன் கடற்படை, விமானப்படை சார்பில் அலங்கார ஊர்திகளும் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன. இடையில் முப்படையினரின் வீரசாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. அவற்றுக்கு பார்வையாளர்கள் பலத்த கரவொலியால் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் துணை ராணுவம், தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ். மாணவர்களும் சிறப்பான அணிவகுப்பை நடத்திச்சென்றனர். இடையில் வீரதீர செயல்களுக்காக ஜனாதிபதி விருது பெற்ற குழந்தைகள் திறந்த ஜீப்பில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
முப்படை அணிவகுப்பை தொடர்ந்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அவை அனைத்தும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கருப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
விழாவின் முத்தாய்ப்பாக, வானில் போர் விமானங்களின் சாகசங்கள் அரங்கேறின. இதில் ஹெர்குலிஸ், சுகோய்-30 எம்.கே.ஐ., குளோப்மாஸ்டர், ஜாகுவார், மிக்-29 போன்ற விமானங்கள் மற்றும் இலகு ரக ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன.
இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. அப்போது மூவர்ண பலூன் கள் பறக்கவிடப்பட்டன.
90 நிமிடம் நடந்த இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக் கான பொதுமக்களும் விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
பெண் கமாண்டோக்கள் முதல் போக்குவரத்து காவலர் வரை சுமார் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
டெல்லியில் நேற்று நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு முதல்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இதில் குறிப்பாக முழுவதும் பெண்களே இடம் பெற்ற அசாம் ரைபிள் படையினர் ராஜபாதையில் கம்பீரமாக அணிவகுத்து ஆண்களுக்கு சரிநிகர் சமம் என்பதை எடுத்துக்காட்டினர்.
இதைப்போல அணிவகுப்பில் கலந்து கொண்ட தரைப்படை, கடற்படையின் சில பிரிவுகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப பிரிவுக்கு பெண் அதிகாரிகளே தலைமை தாங்கி கவனம் ஈர்த்தனர். மேலும் கேப்டன் ஷிகா சுரபி தனது சக ஆண் அதிகாரிகளுடன் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டது பலத்த வரவேற்பை பெற்றது.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 4 வீரர்கள் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். 90 வயதை கடந்த அவர்கள் நேதாஜியின் உருவப்படத்துடன் திறந்த ஜீப்பில் வலம் வந்தபோது கூட்டத்தினரின் கரவொலி அடங்க நேரம் பிடித்தது.
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட இலகு ரக எம்.777 பீரங்கிகள், கே.9 வஜ்ரா மற்றும் தானியங்கி பீரங்கி போன்றவை முதல் முறையாக ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்றன. விமான சாகசத்தில் ஈடுபட்ட ஏ.என்.32 ரக போர் விமானம் ஒன்று முதல் முறையாக பாரம்பரிய எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளில் இயக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 6-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அந்த கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதனால் நேற்றைய விழாவில் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதில் அமர்ந்து விழா நிகழ்வுகளை கண்டுகளித்தார். இதைப்போல கடந்தமுறை ராகுல்காந்தியுடன் 6-வது வரிசையில் இருந்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத்துக்கு ராகுலுக்கு பிந்தைய வரிசையில் இடம் அளிக்கப்பட்டது. அதில் அமர்ந்து அவர் விழாவில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 22 அலங்கார ஊர்திகள் நேற்றைய அணிவகுப்பில் இடம்பெற்றன. மகாத்மாகாந்தியின் கொள்கைகள் மற்றும் போராட்டங்களை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரதங்கள், காந்தியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டின.
அந்தவகையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை சித்தரித்த மராட்டிய ஊர்தி, அந்தமான் சிறைக்கைதிகளுக்கு காந்தி வழங்கிய அறிவுரையை வெளிப்படுத்தும் அந்தமான் ஊர்தி, தண்டி யாத்திரையை நினைவுகூரும் குஜராத் ஊர்தி, பெலகாவி காங்கிரஸ் மாநாட்டை சித்தரிக்கும் கர்நாடக ஊர்தி, அனசக்தி ஆசிரமத்தை சித்தரிக்கும் உத்தரகாண்ட் ஊர்தி போன்றவை பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றன.
Related Tags :
Next Story