சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா


சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா
x
தினத்தந்தி 11 May 2019 9:15 PM GMT (Updated: 11 May 2019 8:52 PM GMT)

டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய பெண்ணை, பிரியங்கா காந்தி விமானத்தில் அனுப்பி வைத்தார்.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை (சோனியா காந்தியின் தொகுதி) சேர்ந்த அன்ஷூ என்ற பெண் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுபற்றி பிரியங்கா காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனே அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார். அந்த விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் பட்டேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி செல்ல இருந்தனர். அன்ஷூ அவரது பெற்றோர், ஹர்திக் பட்டேல், அசாருதீன் ஆகியோர் விமானத்தில் டெல்லி சென்று அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜீவ் சுக்லாவுக்கு விமானத்தில் இடம் இல்லாததால் பின்னர் அவர் ரெயில் மூலம் டெல்லி சென்றார்.

Next Story