உத்தரகாண்டில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 7 பேர் பலி என அச்சம்


உத்தரகாண்டில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 7 பேர் பலி என அச்சம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:45 AM GMT (Updated: 6 Aug 2019 4:45 AM GMT)

உத்தரகாண்டில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி என அஞ்சப்படுகிறது.

உத்தரகாண்டில் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த பேருந்தில் 18 குழந்தைகள் பயணித்துள்ளனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

Next Story