வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வரும், நவம்பர் 4-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, 'வாட்ஸ் -அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் 'வாட்ஸ்-அப்' தகவல்களை உளவு பார்க்க, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டிருந்தால், அது மிகப்பெரிய மனித உரிமை மீறல்; தேசிய பாதுகாப்புக்கும் எதிரானது. இவ்விவகாரத்தில் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வரும், நவம்பர் 4-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, 'வாட்ஸ் -அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் 'வாட்ஸ்-அப்' தகவல்களை உளவு பார்க்க, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டிருந்தால், அது மிகப்பெரிய மனித உரிமை மீறல்; தேசிய பாதுகாப்புக்கும் எதிரானது. இவ்விவகாரத்தில் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
If the BJP or the government has engaged Israeli agencies to snoop into the phones of journalists, lawyers, activists and politicians, it is a gross violation of human rights and a scandal with grave ramifications on national security. Waiting for the government’s response.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) 1 November 2019
Related Tags :
Next Story