ஒடிசா மாநிலத்தில் இன்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஒடிசா மாநிலத்தில் இன்று 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 July 2020 3:30 PM GMT (Updated: 11 July 2020 3:30 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 570 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு முக்கிய கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,526 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரு பெண் உட்பட 5 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதனால் ஒடிசாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 384 பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், மற்றும் 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலமாகவும் கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story