மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக மேலும் 10,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,87,030 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் மேலும் 8,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,50,196 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாநிலத்தில் 266 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,842 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 1,47,018 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story