டெல்லியில் இன்று 2,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று புதிதாக 2,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,833 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,616 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,643 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை மொத்தம் 2,72,948 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 22,232 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.