டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்வு


டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 18 Oct 2020 12:33 PM GMT (Updated: 18 Oct 2020 12:33 PM GMT)

டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,017 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 2,863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,716 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 23,292 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story