மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா


மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Nov 2020 10:38 PM GMT (Updated: 6 Nov 2020 10:38 PM GMT)

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,62,476 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,396 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் தற்போது 15,962 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2,62,476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story