கொரோனாவில் இருந்து மீண்டுவரும் கர்நாடகம் : இன்று புதிதாக 1,963 பேருக்கு தொற்று உறுதி


கொரோனாவில் இருந்து மீண்டுவரும் கர்நாடகம் : இன்று புதிதாக 1,963 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Nov 2020 4:50 PM GMT (Updated: 9 Nov 2020 4:50 PM GMT)

கர்நாடகாவில் இன்று மேலும் 1,963 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் அதிகரித்து வந்தது ஆனால் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வீழ்ச்சி பாதையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 1,963 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,48,850 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,410 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,686  பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,04,485  ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 32,936 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story