தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா


தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Nov 2020 4:47 AM GMT (Updated: 16 Nov 2020 4:47 AM GMT)

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,876 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 1,539 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது தெலங்கானாவில் 14,385 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 2,42,084 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story