ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து


ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து
x

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புவனேஷ்வர், 

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா கூறுகையில், “

ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்”  என்றார்.

ஒடிசாவில் கடந்த 2019- அம் ஆண்டு நடைபெற்ற 11,064  சாலை விபத்துக்களில் 4 ஆயிரத்து 688 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகள் ஆகும். அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆயிரத்து 333 ஆக  இருந்தது. அதில், 2 ஆயிரத்து 398- பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். இவர்களில் 2,156- பேர்  விபத்தின் போது தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். 


Next Story