இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு


இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 3:17 PM GMT (Updated: 30 April 2021 3:17 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மே மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தலைவர் வித்யாசாகர் கூறுகையில், இந்தியா முழுவதும் அடுத்த வாரம் (மே 3 முதல் மே 5) கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சமடையும் என்பது எங்கள் நம்பிக்கை’ என்றார்.

Next Story