தீபாவளி வரை உணவு தானியங்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு - பிரதமர் மோடி


தீபாவளி வரை உணவு தானியங்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Jun 2021 5:41 PM IST (Updated: 7 Jun 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
  • உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
  • கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக  முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். 
  • கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.
  • கொரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படைவசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். 
  • மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம். 
  • அனைத்து கட்டமைபைப்புகளையும்பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 
  • மக்களை காப்பாற்றுவதற்காக முப்படைகளையும் பயன்படுத்தினோம். 
  • தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம்.
  • தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத  வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
  • முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.
  • அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும்.
  • மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்யத்தேவையில்லை.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.
  • இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.
  • தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.
  • நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
  • ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனைடவர்.


Next Story