தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா


தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2021 9:02 PM GMT (Updated: 25 Jun 2021 9:02 PM GMT)

தெலங்கானாவில் தற்போது 15,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநில சுகாதாரத்துறைஇன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,18,837 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,618 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 1,556 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் தெலங்கானாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,99,695 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 15,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதா தெலங்கானா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story