மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு
x
தினத்தந்தி 14 July 2021 10:22 AM GMT (Updated: 14 July 2021 11:22 AM GMT)

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி   17% ல் இருந்து 28% ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார். 

Next Story