புதுச்சேரி இளைஞர்களுக்கே 10 ஆயிரம் அரசு பணியிடங்களை வழங்க வேண்டும்; அ.தி.மு.க. கோரிக்கை

புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கே 10 ஆயிரம் அரசு பணியிடங்களை வழங்க வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின உரையில், 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல் மந்திரி அறிவித்தார். இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.
முதல் மந்திரியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே வேளையில், 10 ஆயிரம் பணியிடங்களையும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியின் தவறான நடவடிக்கையால், 2018ம் ஆண்டு உதவி பேராசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் பணியிடங்களில் வட மாநிலத்தவர் சேர்ந்துள்ளனர்.
இது புதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ்-தி.மு.க. செய்த மிக பெரிய துரோகம் ஆகும். இந்த நிலை தொடராமல் இருக்க முதல்வர் ரங்கசாமி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆயிரம் பணியிடங்களும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே கிடைத்திட அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story