மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு


மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு
x
தினத்தந்தி 25 Oct 2021 4:17 PM GMT (Updated: 25 Oct 2021 4:17 PM GMT)

மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பதிவான ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 3 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,586 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 37 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

Next Story