ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. ஏற்கெனவே 2 முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 20ம் தேதி தாக்கல்செய்யபட்ட மற்றொரு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காரசார வாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story