மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு


மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 7:08 AM GMT (Updated: 1 Dec 2021 7:08 AM GMT)

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மாண்பை மீறும் வகையில் செயல்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரையும் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவை துணைஅவைத்தலைவர் அறிவித்தார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மக்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர்.  

ஆனால், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கமறுத்ததையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனையடுத்து தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பியதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story