அசாமில் நேற்று 130 பேருக்கு கொரோனா; 135 பேர் டிஸ்சார்ஜ்


அசாமில் நேற்று 130 பேருக்கு கொரோனா; 135 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 17 Dec 2021 7:30 PM GMT (Updated: 17 Dec 2021 7:30 PM GMT)

அசாமில் தற்போது 1,094 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,19,298 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,141 ஆக உள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில் 135 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,10,716 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 1,094 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story