மராட்டியத்தில் இன்று 43,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று 43,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 Jan 2022 4:26 PM GMT (Updated: 19 Jan 2022 4:26 PM GMT)

மராட்டியத்தில் இன்று 43,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 43 ஆயிரத்து 697 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 லட்சத்து 25 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 46 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 69 லட்சத்து 15 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 708 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 214 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,074 ஆக உயர்ந்துள்ளது.

Next Story