கணவன் தொல்லை: சாப்பாட்டில் 8 வருடமாக மருந்து கலக்கி கொடுத்து சிக்கிய மனைவி


கணவன் தொல்லை: சாப்பாட்டில் 8 வருடமாக  மருந்து கலக்கி கொடுத்து சிக்கிய மனைவி
x
தினத்தந்தி 5 Feb 2022 3:36 PM IST (Updated: 5 Feb 2022 3:36 PM IST)
t-max-icont-min-icon

கணவன் தொல்லையால் சாப்பாட்டில் 8 வருடமாக மருந்து கலக்கி கொடுத்த மனைவி சிக்கினார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் சங்கர் (38). இவனது மனைவி ஆஷா (34). கணவர் சதீஷ் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி 2012ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்கள். 

இந்த நகரில் சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 2013ஆம் ஆண்டு முதல் சதீஷ் மனைவிக்கு மனதளவிலும் உடலளவிலும் வன்முறை கொடுமையில் ஈடுபட்டுவந்தார். இதில் பொறுமை இழந்த மனைவி சதீசை ஏதாவது ஒருவிதத்தில் அடக்கி வைக்க வேண்டும் என நினைத்து சாப்பாட்டில் மனநிலை பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய மருந்தை கலக்கி கொடுத்து வந்தார். 

அன்று முதல் கணவர் சதீஷ் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் இவருக்கு குறைந்தபாடில்லை கடந்த ஏழெட்டு வருடமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் இவருடைய நோய் குணமாகவில்லை. 

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருபது நாள் வீட்டில் சாப்பிடக்கூடாது வெளியில் சாப்பிட்டு பார்க்கலாம் என ஓட்டலில் மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு இரவு நேரம் வீட்டில் வந்து படுத்துக் கொள்வது வழக்கம். இந்த 20 நாளும் இவருக்கு உடலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

 முன்பை போல உஷாராக காணப்பட்டார். அப்போது வீட்டில் சாப்பாட்டில் தான் ஏதோ தவறு நடந்துள்ளது என நினைக்க தொடங்கினார். கடந்த வாரம் வீட்டிற்கு வந்த இவர் மனைவியிடம் பழகும் ஒரு தோழியை சந்தித்து வீட்டில் சாப்பிடும் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

கடந்த 20 நாட்களாக வெளியே சாப்பிடும்போது உடல்நிலை பாதிப்பு இல்லை என தெரிவித்தார். ஏன் என்று அவர் கேட்டதற்கு. தோழி உங்கள் சாப்பாட்டில் உங்களை கொலை செய்ய மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தை உங்கள் உணவில் கலக்கி கொடுத்துள்ளார் எனக் கூறினார். 

நான் கொடுக்கும் மருந்தை உனது கணவனுக்கும் கொடு என எனக்கும் அறிவுறுத்தினார். ஆனால் நான் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்கும்போது சம்பவத்தை கூறுகிறேன் என தோழி கூறினாள்.

உடனடியாக மனைவி மீது பாலா நகரில் உள்ள காவல் நிலையத்தில் சதீஷ் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று மாலை விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்போது விசாரணையில் மனைவி கடந்த 8 வருடமாக எனது கணவனுக்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் மனநிலை பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தை சாப்பாட்டில் கலக்கி கொடுத்து வந்தது உண்மைதான் என தெரிவித்தார். 

இந்த மாதிரி தினசரி கொடுத்தால் அவருடைய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு விரைவில் இறந்து விடுவார் என மனைவி கூறினார். நான் அப்படி மருந்து கலக்கிக் கொடுக்க காரணம் அவர்என்னை தினசரி வன்கொடுமை செய்து வந்ததே காரணம் எனவும் போலீசில் மனைவி தெரிவித்தார். 

போலீஸார் வீட்டைபரிசோதனை செய்தபோது வீட்டுக்குள் ஒரு அறையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மனைவியை கைது செய்து பாலா நீதிமன்றத்தில் ஒப்படைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story