கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 March 2022 5:10 PM GMT (Updated: 4 March 2022 5:10 PM GMT)

கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3 ஆயிரத்து 878 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 24 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 251 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.

Next Story