காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு


காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 May 2022 10:34 PM GMT (Updated: 10 May 2022 10:34 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பண்டோஷன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதற்கிடையில் துப்பாக்கி சண்டை நடக்கும் பகுதியில் இருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டபோது, பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் பொதுமக்களில் இருவரும், ஒரு ராணுவ வீரரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஷாகித் கானி தார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே அனந்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Next Story