சத்தீஸ்கரில் 33 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண்

கோப்புப்படம்
சத்தீஸ்கரில் 33 நக்சலைட் பயங்கரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
சுக்மா,
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சலைட் பயங்கரவாதிகள் மனம் திருந்தி வாழ்வதற்காக 'ஜன் தர்ஷன்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் டப்பமர்காவில் நடந்த முகாமில் 33 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
அவர்களில் 3 பேர், தலைக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்களாவர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான சில வசதிகள் போலீஸ் தரப்பில் செய்து தரப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





