குஜராத்தில் கேபிள் பாலம் விழுந்து நொறுங்கியதில் 35 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன...?


குஜராத்தில் கேபிள் பாலம் விழுந்து நொறுங்கியதில் 35 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன...?
x
தினத்தந்தி 30 Oct 2022 9:26 PM IST (Updated: 30 Oct 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கேபிள் பாலம் இன்று விழுந்து நொறுங்கியதில் 35 பேர் உயிரிழந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதன்பின்னர், கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில், பாலத்தில் இன்று 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். பலரது நிலைமை என்னவென்று தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். உள்ளூர்வாசிகளும் உதவிக்கு ஓடி வந்துள்ளனர். 100 பேர் வரை இன்னும் பால இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவலை குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். எனினும், குஜராத் பஞ்சாயத்து மந்திரி பிரிஜேஷ் மெர்ஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நிலைமை பற்றி என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து உள்ளார். குஜராத் முதல்-மந்திரியும் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். காயமடைந்த மக்களை காப்பாற்ற உள்ளூர் தலைவர்களும் பணியாற்றி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story