அந்தமான் தீவுகளில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம்


அந்தமான் தீவுகளில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம்
x

நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

போர்ட் பிளேர்,

அந்தமான் தீவுகளில் இன்று காலை 7.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் தாலோட் தீவுகளில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story