இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் டாக்டர் அலட்சியத்தால் 6 வயது சிறுமி சாவு


இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் டாக்டர் அலட்சியத்தால் 6 வயது சிறுமி சாவு
x

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் டாக்டர் அலட்சியத்தால் 6 வயது சிறுமி உயிரிழந்தாள்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே விஜயநகரை சேர்ந்தவர் தாதாபியர். இவரது மனைவி நசியா பானு. இந்த தம்பதிக்கு 6 வயதில் ரபியா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமான நிலையில், சிறுமியை தேவனஹள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பொதுப்பிரிவில் வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாள். அங்கு சேர்க்கப்பட்ட 3 மணி நேரத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து அறிந்ததும், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் டாக்டர்களின் அலட்சியத்தால் தான் தங்களது மகள் உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.


Next Story