தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை...! பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்


தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை...! பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்
x

தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை...! சாக்லெட் கொடுத்து வன்கொடுமை செய்த 81 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகே 4 வய்து சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.

பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து சிறுமியை அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி தனது வலியால் அழுது கொண்டே பெற்றோரிடம் சென்று உள்ளார். உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை டாக்டர்கள் உறுதிசெய்தனர், மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கஜோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து போலீசார் ராயை கைது செய்தனர். விசாரணையில், ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story