குஜராத்தில் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு - அமித்ஷா அளித்த உறுதி


குஜராத்தில் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு - அமித்ஷா அளித்த உறுதி
x

குஜராத்தில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கட்ச், ஜாம்நகர், ஜுனாகத் மற்றும் நவ்சாரி ஆகிய பகுதிகளில், வெள்ளம் பாதித்த இடங்களில், பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, குஜராத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி பூபேந்திர படேலிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்த கடினமான நேரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு துணையாக இருப்பார்கள் என்று அமித்ஷா உறுதியளித்தார்.


Next Story