ஆபாச வீடியோ பார்த்து... 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்


ஆபாச வீடியோ பார்த்து... 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்
x

பீகாரில் சில ஆபாச வீடியோக்களை பார்த்த 12 வயது சிறுவன், 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரிய வந்து உள்ளது.



பாட்னா,


பீகாரின் சீதாமர்ஹி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் உள்ளான். இதன்பின்னர், சிறுமி ரத்தம் வடிய வீட்டுக்கு அழுது கொண்டே வந்து உள்ளார். நடந்த விவரங்களை வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். இதில், சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் நடந்திருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து நான்பூர் காவல் நிலையத்தில் சிறுவன் மீது சிறுமியின் பாட்டி புகார் அளித்து உள்ளார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை போலீசார் மேற்கொண்டனர்.

அதில், சிறுவன் நடந்த விவரங்களை கூறியுள்ளான். இதுபற்றி ராகேஷ் ரஞ்சன் ஜா என்ற காவல் அதிகாரி கூறும்போது, சிறுவன் வீட்டில் இருந்தபோது பிடித்து விசாரித்தோம்.

சில ஆபாச வீடியோக்களை சிறுவன் பார்த்து உள்ளான். அதன்பின்னரே, பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளான் என கூறியுள்ளான் என்று காவல் அதிகாரி ரஞ்சன் ஜா கூறியுள்ளார். இதனை அடுத்து, சிறுவனை சீர்திருத்த இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.


Next Story