பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்..!


பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்..!
x
தினத்தந்தி 2 July 2023 7:25 AM GMT (Updated: 2 July 2023 7:27 AM GMT)

7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

புனே,

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள மாவல் பகுதியில் ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி வழக்கம்போல் அப்பள்ளி செயல்பட்டது. அன்று, அங்கு படிக்கும் 7 வயது சிறுமி பள்ளி கழிவறைக்கு சென்ற போது அதே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் கழிவறையில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதனால் சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே வந்துள்ளாள். அம்மா கேட்டதற்க்கு நடந்ததை கூறியுள்ளாள். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் அச்சிறுவன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுவனை சிறார் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பள்ளியில் 12 வயது சிறுவன் இத்தகைய பாலியல் குற்றத்தை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story