கட்டையால் அடித்து வடமாநில தொழிலாளி கொலை


கட்டையால் அடித்து  வடமாநில தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் வடமாநில தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பீகாரை சேர்ந்தவர் முகேஷ் (வயது 35). தொழிலாளியான இவர் பெங்களூரு எலச்சனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கட்டிடத்தில் முகேஷ் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது முகேசின் தலையில் மர்மநபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த நிலையில் முகேஷ் கொலையானது பற்றி தகவல் அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story