ஆட்டோவில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை


ஆட்டோவில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

ஆந்திராவை சேர்ந்த 32 வயது பெண், பெங்களூரு கொடிகேஹள்ளியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார். இந்த நிலையில் அந்த பெண் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அந்த சமயத்தில் டிரைவர் ஆட்டோவை ஓட்டியபடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் பழுதாகிவிட்டதாக கூறி ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி உள்ளார். அப்போது அந்த பெண் ஆட்டோவில் இருந்து இறங்க முயன்றுள்ளார். அப்போது பெண்ணின் ஆடைகளை கிழித்ததுடன், அவருக்கு டிரைவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். உடனே அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மேலும் அருகில் உள்ள சாலைக்கு சென்று அங்கிருந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story