அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு- பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி நூதன போராட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு- பிரதமருக்கு ரூ.420 அனுப்பி ஆம் ஆத்மி நூதன போராட்டம்
x

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ரூ.420க்கான காசோலைகள் மற்றும் வரைவோலைகளை பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனை அக்கட்சியினர் உத்தரப் பிரதேச பொறுப்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம் எனவும் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:- மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக உ.பி முழுவதும் நன்கொடை அளிக்க இளைஞர்கள் மற்றும் மாணவர் பிரிவு உறுப்பினர்களை வலியுறுத்தப்படுகிறது.

மோடி அரசுக்கு ரூ.420 காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புவதன் மூலம், அடையாளப் போராட்டத்தை பதிவு செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம். சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது.

உதய்பூரில் தையல்காரரான கன்ஹையா லால் கொல்லப்பட்டதில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை துணை அமைப்பான ராஷ்ட்ரிய முஸ்லீம் மஞ்ச் ஆகியவற்றின் பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story