'ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை' - ஒடிசா காவல்துறை எச்சரிக்கை


ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை - ஒடிசா காவல்துறை எச்சரிக்கை
x

தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு ஒடிசா காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரெயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சமூக வலைதளங்களில் ரெயில் விபத்து தொடர்பான வதந்திகள் பரவி வருவதை போலீசார் கண்காணித்தனர். இதையடுத்து ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா காவல்துறையினர் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் மதவாத வண்ணம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா காவல்துறை எச்சரித்துள்ளது.




Next Story