ஏர் இந்தியா விமானி பயிற்சியின்போது, உயிரிழப்பு


ஏர் இந்தியா விமானி பயிற்சியின்போது, உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Nov 2023 12:15 AM GMT (Updated: 17 Nov 2023 1:46 AM GMT)

அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக பணியாற்றியவர் ஹிம்மனில் குமார். 30 வயது கொண்ட அவர் முனையம் 3-ல் நேற்று காலை பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு லேசான வலி ஏற்பட்டு உள்ளது. அவருடன் இருந்த சக பணியாளர்கள் அவருக்கு உதவி புரிந்தனர். விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய அளவிலான விமானங்களை ஓட்டி செல்லும் விமானிகள், உருவில் பெரிய விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை அவர் மேற்கொண்டார். இதற்காக கடந்த அக்டோபர் 3-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கினார்.

அவருக்கு களைப்பு எதுவும் ஏற்படவில்லை. விடுமுறைக்கு பின்னரே, அவர் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். அவருடைய கடந்த கால மருத்துவ ஆய்வு முடிவுகள் அனைத்தும் நன்றாகவே இருந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் தந்தையும் விமான நிறுவனத்தில் ஒரு மூத்த அதிகாரியாவார்.


Next Story