விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் 2 புலிகள் உயிரிழப்பு


விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் 2 புலிகள் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

விசாகப்பட்டினம் இந்திராகாந்தி உயிரியல் பூங்காவில் 2 புலிகள் உயிரிழந்தன.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திராகாந்தி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த ஜானகி என்ற 22 வயதான புலி, கடந்த சனிக்கிழமை காலை இறந்தது.

இதையடுத்து அன்றைய தினம் இரவில் குமாரி என்ற 23 வயதான புலியும் மரணம் அடைந்தது. இரு புலிகளும் வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளால் இறந்தன.


Next Story