அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாயம்

அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரகாஷ் சிங் ராணா 13 நாட்களாக காணவில்லை.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனை சேர்ந்த ராணுவ வீரரான பிரகாஷ் சிங் ராணா, அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீனா எல்லையில் உள்ள தக்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் பிரகாஷ் சிங் ராணாவை காணவில்லை என தெரிகிறது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து அவரது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். ராணுவ வீரரை 13 நாட்களாக காணவில்லை என்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





