வியாபாரி கொலையில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது


வியாபாரி கொலையில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது
x

கள்ளக்காதல் விவகாரத்தில் வியாபாரி கொலை வழக்கில் அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் கைதானார்.

விஜயநகர்:

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சோடப்பா, வியாபாரி. மேலும் அவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி சுதா. கடந்த 3-ந் தேதி வரதாபுரா ரோட்டில் தலையில் பலத்தகாயங்களுடன் சோடப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது கணவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் தான், அவரை கொலை செய்திருப்பதாக சுதா போலீசாரிடம் கூறினார். அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சுதாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலன் பண்டர் குருவப்பாவுடன் சேர்ந்து கணவர் சோடப்பாவை கொலை செய்ததை சுதா ஒப்புக் கொண்டாா. சுதாவின் உறவினர் தான் பண்டர் குருவப்பா ஆவார். அவர்கள் 2 பேருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக சோடப்பா இருந்துள்ளார். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி வியாபாரத்திற்கு சென்ற சோடப்பாவை பண்டர் குருவப்பா, வாசு, சுனில் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இதற்காக கள்ளக்காதலன் பண்டர் குருவப்பாவுக்கு சுதா ரூ.90 ஆயிரம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வாசு, சுனிலை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story