7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு - குஜராத் போலீஸ் அதிரடி


7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு - குஜராத் போலீஸ் அதிரடி
x

பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போர்பந்தர்,

இந்திய மீனவர்கள் 7 பேர் குஜராத் மாநிலம், ஜகாவ் கடற்கரையில் இந்திய கடல் பகுதியில் கடந்த 6-ந் தேதி மாலை 5 மணிக்கு ஹர்சித்தி என்ற படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையின் படகில் வந்த கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். இதில் படகை மூழ்கடித்த அவர்கள், மீனவர்களைப் பிடித்து தங்கள் படகில் கடத்தினர். அவர்களை அடித்து உதைத்து மிரட்டி பின்னர் விடுவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின்போரில் பாகிஸ்தான் கடற்படையினர் 20-25 பேர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல், சேதம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போர்பந்தர் மாவட்ட சிறப்பு போலீஸ் நடவடிக்கை குழு சப்-இன்ஸ்பெக்டர் தொடர் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவி மோகன் சைனி தெரிவித்தார்.


Next Story