பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை விரைவில் தொடக்கம் - தயாராகும் பக்தர்கள்


பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை விரைவில் தொடக்கம் - தயாராகும் பக்தர்கள்
x
தினத்தந்தி 5 April 2023 6:12 PM GMT (Updated: 6 April 2023 12:37 AM GMT)

'சார் தாம்' என்று அழைக்கப்படும் யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்க உள்ளது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்க உள்ளது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 22-ந்தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கான யாத்திரை தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 25-ந்தேதி கேதர்நாத் கோவில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 27-ந்தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரை தொடங்குகிறது.



Next Story